தொலைத்து கிடைத்தது
ஆயிற்று இன்றுடன்
13 வருடம்
என் கண்மணியை நான் தொலைத்து
கூடத்தில் விளையாடிய குழந்தை
நான் உள்ளில்
திடீரென மௌனம்
யோசிக்க நேரமில்லை
கூடத்திற்கு தாவினேன்
செல்வியை காணவில்லை
வாயிற் கதவு திறந்து கிடந்தது
முடிந்தது
தேடல் அழுதல்
காத்திருத்தல்
13 வருடம்
நேற்று சந்தையில்
ஒரு 16 வயது பெண் குழந்தையின் கழுத்தில்
ஒரு லாக்கெட்
எனக்கு நன்கு பழக்கப்பட்ட செயின்
அம்மா உன் பெயர் என்ன
செல்வி
இந்த லாக்கெட்டை
நான் பார்க்கலாமா
திறந்தாள்
அவள் குழந்தையின் உருவம்
யாரம்மா இது
நான்
உன் அம்மா
அழுகை
என்ன குப்பைத்தொட்டியில் போட்டாளாம்
சித்தி சொன்னா
அங்கே ஒரு பெண்மணி வர இவள் ஒதுங்கினாள்
அந்த பெண் குழந்தையுடன்
மூன்றாவது தெருவில் ஒரு வீட்டில்
பிறகு…
போலீஸ் விசாரணை கைது
அந்த செல்வி இந்த தாயின் மகள் ஆனாள்
உண்மை தெரிந்தது
ஏன் கடத்தினாள்
குழந்தை பாக்கியம் இல்லை
என் செல்வி கிடைத்தாள்
இறைக்கு நன்றி
ஒரு வேண்டுதல்
என்னை போல்
குழந்தைகளை தொ
லைத்த
சகல அம்மாக்களுக்கும்
அருள் புரிவாய்
No comments:
Post a Comment